கரூரில் பரபரப்பு.. அரசு ஊழியர் வீட்டில்..115 சவரன் நகைகள்,600 கிராம் வெள்ளி...அதிர்ச்சியில் போலீசார்

x

கரூர் டிஎன்பிஎல் காகித ஆலையில் ஸ்டோர் மேலாளராக பணியாற்றி வரும் அண்ணாதுரை, அங்குள்ள ஆலை நிர்வாக அலுவலக குடியிருப்பில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இந்நிலையில், சொந்த வேலையின் காரணமாக அவர் சென்னை சென்றிருந்த நிலையில், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், பீரோவில் இருந்த 115 சவரன் நகைகள், 600 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடுத்து சென்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்