கரு முட்டைக்காக மருத்துவர்களிடம் சண்டை போட்ட கணவன், மனைவி - ஒசூரில் பரபரப்பு..!

x

கிருஷ்ணகிரி மாவட்டம் தின்னூர் பகுதியை சேர்ந்த சப்தகிரியும் அவரது மனைவியும், ஒசூரில் உள்ள கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் அந்த கருத்தரிப்பு மையம், 3 கருமுட்டைகளை சப்தகிரியின் மனைவியின் கருப்பைக்குள் செலுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் கருப்பைக்குள் செலுத்தப்பட்ட கருமுட்டைகள் கருத்தரிக்கவில்லை என தெரிகிறது. இந்தநிலையில், இரண்டு கருமுட்டைகள் மட்டுமே கருப்பைக்குள் செலுத்தப்பட்டதாகவும், ஒரு கருமுட்டை பணத்திற்காக விற்கப்பட்டதாகவும் கூறி, சப்தகிரியின் குடும்பத்தினர் கருத்தரிப்பு மைய மருத்துவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறவே, இந்த விவகாரத்தில் போலீசார் தலையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்