வெடித்து சிதறிய ஏசி... வீட்டினுள் சிக்கிய 2 வயது குழந்தை -தர்மபுரி அருகே அதிர்ச்சி சம்பவம்

x
  • தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே மாட்லாம்பட்டியில் மாதையன் என்பவரது வீட்டின் மேல் மாடியில் அவரது மகன் சதிஷ் (30) அவரது மனைவி நளினி (25) இவர்களது குழந்தை தாஸ் (2) ஆகியோர் வசித்து வந்துள்ளனர்,
  • வீட்டில் பொருத்தப்பட்டிருந்த ஏசியிலிருந்து திடிரென வெடி சத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து மெல்ல பற்ற தொடங்கிய தீ வீடு முழுவதும் பரவி தீப்பற்றி எரிய தொடங்கியிருக்கிறது.
  • வீட்டிலீருந்த உடமைகள் தீயில் எரிந்து சாம்பலானது.
  • வீடும் சேதமடைந்தது தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தருமபுரி தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து பற்றி எரிந்த தீயை மேலும் பரவாமல் தடுத்து கட்டுக்குள் கொண்டு வந்து தீயை அணைத்தனர்.
  • லேசான தீக்காயம் ஏற்பட்ட குழந்தை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருக்கிறது,
  • நல்வாய்ப்பாக இந்த தீ விபத்தில் உயி்ர்சேதம் எதுவும் ஏற்படவில்லை, இச்சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்