கடைக்கு வந்து தண்ணீர் குடித்த பட்டியலினத்தவரை தாக்கிய டீக்கடை ஓனர் - கடலூரில் அதிர்ச்சி..!

x

கடலூர் அருகே டீக்கடையில் தண்ணீர் குடித்த பட்டியலின சமுதாயத்தை சேர்ந்தவரை தாக்கிய கடை உரிமையாளர் சிறையில் அடைக்கப்பட்டார்.பள்ளிப்பட்டு சமத்துவபுரத்தில் வசிக்கும் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த குப்பன், மங்கலம்பேட்டையில் அண்ணாதுரை என்பவரின் டீக்கடைக்கு ​ சென்று தேநீர் கேட்டுள்ளார். அப்போது, தாகமாக இருந்ததால், கடையினுள் தண்ணீரை எடுத்து குடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, உள்ளே வந்து எப்படி தண்ணீர் குடிப்பாய் என கூறி குப்பனை அண்ணாத்துரை தாக்கியுள்ளார். இது குறித்து, குப்பன் அளித்த புகாரை விசாரித்த மங்கலம் பேட்டை போலீசார், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அண்ணாதுரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்