சென்னையில் மூட்டை மூட்டையாக போதைப்பொருளின் மருந்து மூலப் பொருள்.. தட்டி தூக்கிய போலீசார்

x

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில், போதைப்பொருட்கள் தயாரிக்க பயன்படும் மருந்து மூலப்பொருட்கள் உள்ளதாக, கூடுதல் இணை ஆணையர் லட்சுமணனுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு சென்ற போலீசார் 4 மூட்டைகளை கைப்பற்றினர். போதைப்பொருட்கள் தயாரிக்க பயன்படும் மருந்து மூலப்பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வில்லிவாக்கத்தை சேர்ந்த சம்சுதீன், வண்ணாரப்பேட்டை நாகூர் தோட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ், கொருக்குப்பேட்டையை சேர்ந்த அசைன், வியாசர்பாடியை சேர்ந்த ராமகிருஷ்ணன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து 90 கிலோ மருந்து மூலப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள முனியாண்டி என்பவரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்