எனக்கு 18.. உனக்கு 38.. மாட்டினால் அம்மா - மகன் என எஸ்கேப்.. சென்னையையே உருட்டிய உருட்டு ஜோடி

x
  • இன்ஸ்டாகிராம் மூலம் நெல்லையில் இருந்து சென்னைக்கு காதல் கனெக்‌ஷன்...
  • ஏற்கெனவே திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தாயான நெல்லையை சேர்ந்த பாத்திமா என்பவர், சென்னையை சேர்ந்த அக்பர் பாட்ஷா என்ற இளைஞருடன் இன்ஸ்டாவில் நெருங்கி பழகி வந்துள்ளார்..
  • இந்த பழக்கம் நாளுக்கு நாள் அதிகமான நிலையில், இருவரும் ஒருவரையொருவர் காதலிக்க ஆரம்பித்துள்ளனர்....
  • தனக்கு ஏற்கெனவே, திருமணம் ஆகிவிட்டது எனவும், எனக்கு இரு குழந்தைகளும் இருக்கின்றனர் என தெரிவித்த பாத்திமா, தன் கணவரை பிரிந்து தனியே வசித்து வருவதாக தெரிவித்துள்ளார்...
  • காதல் மோகத்தில் இருந்த 18 வயது இளைஞன் அக்பர் பாட்ஷா, அதெல்லாம் தனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை எனவும், சென்னை வந்து விடு உன்னை பார்த்துக் கொள்கிறேன் எனக்கூறி சென்னை அழைத்து வந்திருக்கிறார்...
  • சென்னையில் இருவரும் ஒன்றாக வசித்து உல்லாசமாக நகரை சுற்றி வந்த நிலையில், அதற்கு போதிய பணமில்லாமல் செயின் பறிப்பில் இறங்கியுள்ளனர்...
  • நூதன முறையில் கைவரிசை காட்ட இறங்கிய இருவரும் backup-ஆக பல திட்டங்களுடன் களத்தில் இறங்கி கைவரிசை காட்டி வந்திருக்கிறார்கள்...
  • ஆள்நடமாட்டம் இல்லாத இடம்.... அந்த வழியில் தனியே வரும் பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் போன்றோரிடம் அக்பர் பாஷா வழிப்பறி செய்து ஓட்டம்பிடிப்பது ப்ளான் A...
  • இவ்வாறு ஓட்டம் பிடிக்கும் அக்பர் பாட்ஷா ஒருவேளை மாட்டிக்கொண்டால் மறைந்திருந்து நோட்டமிடும் பாத்திமா களத்தில் இறங்கி அவர்களுடன் அக்பர் பாஷாவை யாரென தெரியாதது போல் திருடன் திருடன் என கூறி கொண்டு துரத்துவது... ப்ளான் B...
  • ப்ளான் A - ல் முழு பங்கும் அக்பர் பாஷாவினுடையது என்றால் ப்ளான் B- ல் முழு பங்கும் பாத்திமாவுடையது...
  • அக்பர் பாஷாவை துரத்திக் கொண்டிருக்கும் போதே உடன் துரத்துவர்களின் கவனத்தை திசை திருப்புவது, அவர்களை வேறு பாதைகளில் அழைத்து செல்வது என பெரும்பாடுபட்டு அவரை காப்பாற்றுவது பாத்திமாவின் வேலை...
  • ஒருவேளை அக்பர் பாட்ஷா மாட்டிக்கொண்டால், இருவருக்கும் இருக்கும் வயது வித்தியாசத்தை பயன்படுத்தி தாங்கள் அண்ணன் - தங்கை எனவும், அம்மா - மகன் எனவும், சித்தி, பெரியம்மா என பல உருட்டுகளை பயன்படுத்தி பேச்சுத்திறமையால் தப்புவது என செயின் பறிப்பில் கில்லாடியாக இருந்து வந்துள்ளனர்....
  • ஆனால், எத்தனை நாள் இவர்களால் ஆட்டம் காட்ட முடியும்? ஒரு நாள் சிக்கித்தானே ஆக வேண்டும்?
  • சென்னை கோடம்பாக்கத்தில் மூதாட்டி கனிகா என்பவரிடம் இருவரும் செயினை பறித்துள்ளனர்.. இதில் மூதாட்டி அலறவே அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் இருவரையும் துரத்தியுள்ளனர்...
  • இதனால், அதிர்ச்சியடைந்த பாத்திமா ப்ளான் - B யை கையிலெடுத்து உள்ளே புகுந்த நிலையில், அவரால் ஆட்டோ ஓட்டுநர்களை திசை மாற்றவோ, ஏமாற்றவோ முடியவில்லை..
  • அவரும் திருடன் திருடன் என கூறி கொண்டு உடன் வந்ததில் சந்தேகமடைந்த ஆட்டோ ஓட்டுநர்கள், அக்பர் பாஷாவை பிடித்த கையோடு, பாத்திமாவையும் பிடித்து விசாரணை நடத்தி உள்ளனர்...
  • விசாரணையில், அனைத்தும் அம்பலமான நிலையில், இருவரும் ரயில் நிலையங்களை ஒட்டியிருக்கும் பகுதிகளில் பெரும்பாலும் வழிப்பறி செய்ததும் தெரியவந்தது...
  • இருவரிடம் இருந்து நகைகளை பறிமுதல் செய்த ஆட்டோ ஓட்டுநர்கள் இருவரையும் போலீசில் ஒப்படைத்தனர்... போலீசார் விசாரணையில் இருவர் மீது பல திருட்டு வழக்குகள் அசோக்நகர் காவல்நிலையத்தில் இருப்பது தெரியவர, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையிலடைத்தனர்....

Next Story

மேலும் செய்திகள்