பெண் அதிகாரி முடியை பிடித்து தரதரவென இழுத்து தாக்கிய கும்பல் - பதற வைக்கும் வீடியோ

x

பீகார் மாநிலத்தில், பெண் அதிகாரி மணல் கடத்தல்காரர்களால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட்னா மாவட்டம், பிஹ்தா பகுதியில், சட்டவிரோதமாக மணல் கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த தகவலையடுத்து, அந்த பகுதியில், சுரங்கத்துறை பெண் அதிகாரி சோதனை நடத்தச் சென்றுள்ளார். அப்போது, மணல் கடத்தல்காரர்கள், அந்த பெண் அதிகாரியை இழுத்துச் சென்று தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக 44 பேரை கைது செய்துள்ள போலீசார், 3 வழக்குகளையும் பதிவு செய்துள்ளனர். மேலும், பலரை தேடி வருகின்றனர். இதற்கிடையே, தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்