கோபத்தில் வார்த்தையை விட்ட தந்தை.. மனமுடைந்து மகன் விபரீத முடிவு - அதிர்ச்சியில் விஷம் குடித்த தாயும் பலி

x

கரூரில், எந்நேரமும் செல்போன் பயன்படுத்தி வந்ததை தந்தை கண்டித்ததால், மகன் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில், அதிர்ச்சியில் தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தரகம்பட்டி அடுத்த சுண்டுகுளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகன் 23 வயதான செல்வராஜ், வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. செல்வராஜ் எந்நேரமும் செல்போனையை பயன்படுத்தி வந்ததால், ஆத்திரமடைந்த அவரது தந்தை கோவிந்தராஜ் திட்டியுள்ளார். இதில் மனமுடைந்த செல்வராஜ், அந்தப் பகுதியில் உள்ள வேப்பமரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல அறிந்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய் சுமதியும், மன வேதனையில், விஷ விதையை அரைத்து குடித்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், தாய் மற்றும் மகனின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்