கள்ளச்சாராய விவகாரம் - அண்ணாமலை ட்வீட்

x

தமிழகத்தில் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக, வரும் 20ம் தேதி கண்டன போராட்டம் நடத்தப்படும் என, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனையையும், அவற்றால் ஏற்பட்ட துயர் மரணங்களையும் தி.மு.க. அரசு தடுக்கத் தவறிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், தமிழக பாஜக சார்பில், வரும் 20-ஆம் தேதி கண்டன போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெறும் போராட்டத்தில், தான் பங்கேற்க இருப்பதாகவும், அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்