சட்டவிரோத ஆயுத பயன்பாடு.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

x

சென்னை மற்றும் திருச்சியில் பதிவு செய்யப்பட்டுள்ள சட்டவிரோத ஆயுத வழக்கின் விசாரணையை சிபிஐ அல்லது என்.ஐ.ஏ-வுக்கு மாற்றி உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், சட்டவிரோத ஆயுதங்கள் பயன்பாடு என்பது நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானது.

இதை தடுக்க வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை என கூறியுள்ளார்.

மேலும், விசாரணை அதிகாரிகள் தாக்கல் செய்த பதில் மனுவில் விசாரணை முறையாக நடைபெறுவதாக​கூறப்பட்டுள்ளது, அறிக்கை திருப்தியாக உள்ளதாக கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

இருப்பினும், தமிழக போலீசார், விழிப்புடனும், கண்காணிப்புடனும் இருந்து சட்டவிரோத ஆயுத பயன்பாட்டை தடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்