நகைக்கடையில் கர்ச்சீப் போட்டு திருடிய கள்ளக்காதலர்கள்

x

காரைக்கால் நகைக்கடையில் கள்ள காதலனுடன் சேர்ந்து தங்க மோதிரத்தை திருடி சென்ற பெண் கைது செய்யப்பட்டார். காரைக்கால் மாதா கோவில் வீதியில் உள்ள நகைகடையில் விற்பனை முடிந்து நகைகளை சரி பார்த்தபோது, அரை பவுன் தங்க மோதிரம் குறைவது தெரியவந்தது. பின்னர் சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்தபோது ஒரு ஆணும், ஒரு பெண்ணும் நகை வாங்குவது போல் வந்து அரை பவுன் தங்க மோதிரத்தை கர்ச்சீப் ஒன்றில் மறைத்து திருடிக்கொண்டு பிறகு வருகிறோம் என கூறி நகை வாங்காமல் சென்றது தெரியவந்தது.இதுகுறித்து வீடியோ ஆதாரத்துடன் அளித்த புகாரின்பேரில் திருவாரூர் ஐயம்பேட்டையை சேர்ந்த தனலட்சுமியை போலீசார் கைது செய்தனர். அவருடன் வந்த கள்ளக்காதலன் குபேரனே போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்