ஆளுநர் மாளிகையில் இப்தார் விருந்து, இஸ்லாமியர்கள் பங்கேற்று நோன்பு திறப்பு

x

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அளித்த இப்தார் விருந்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

மதநல்லிணக்க அடிப்படையில் புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் இப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். இதனடிப்படையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநரான தமிழிசை செளந்தரராஜன், ஆளுநர் மாளிகையில் இப்தார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை செய்து, நோன்பு திறந்தனர். பின்னர் ஆளுநர் அளித்த விருந்திலும் அனைவரும் பங்கேற்றனர். இதில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, எதிர்கட்சித்தலைவர் சிவா உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், பிரெஞ்சு துணைத்தூதர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்