திருச்செந்தூர் முருகனை இன்று தரிசித்தால் 12 மாத தரிசனம் செய்த பலன்..! - குவியும் பக்தர்கள்

x

முருகப் பெருமான் அவதரித்த வைகாசி மாதம் வரும் விசாக நட்சத்திர நாள் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டிற்கான வைகாசி விசாக திருவிழா இன்று நடைபெறுவதை ஒட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வ ரூப தரிசனமும், 3 மணிக்கு உதய மார்த்தாண்ட பூஜையும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் 650க்கும் மேற்ப்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வைகாசி விசாக திருவிழாவான இன்று முருகனை தரிசனம் செய்வது 12 மாதங்கள் தரிசனம் செய்த பலனை தரும் என்பதால் பக்தர்கள் ஆர்வமுடன் நேற்று முதல் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்