"எங்க உசுருக்கு ஏதாவது ஆச்சுனா யாருங்க பதில் சொல்லுவா?" - கேட்ட கேள்வியால் வெளியேறிய இன்ஜினியர்

x

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே, தரமற்ற முறையில் மேம்பாலம் கட்டப்படுவதாகக் கூறி, பணிகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர். காஞ்சிரங்குளம் ஊராட்சியில், நீரோடையின் குறுக்கே 50 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதனிடையே, பாலத்தின் அடித்தளம் முறையாக கட்டாமல் சேரும் சகதியுமாக கான்கிரீட் அமைக்கப்படுவதாகவும், கையால் பெயர்த்து எடுக்கும் அளவுக்கு தரமற்ற முறையில் அமைக்கப்பட்டிருப்பதாகவும் கிராம மக்கள் குற்றஞ்சாட்டினர். தரமற்ற முறையில் பாலம் கட்டப்படுவது குறித்து பொறியாளரிடம் கேள்வி எழுப்பிய பொதுமக்கள், கட்டுமான பணியை தடுத்து நிறுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்