"சாயக்கழிவு நீரை ஆற்றில் வெளியேற்றினால்..." - எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்

x

சேலத்தில் திருமணிமுத்தாற்றில் சாயக்கழிவுநீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...

ஏற்காடு மலைப்பகுதியில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு, சேலம், நாமக்கல் மாவட்டங்கள் வழியாக காவிரியில் கலக்கிறது. இது கொண்டலாம்பட்டி, ஆத்துக்காடு, உத்தமசோழபுரம் வழியாக செல்கிறது. இந்த பகுதியில் ஒரு சில சாயப்பட்டறைகளின் கழிவுநீர் திருமணிமுத்தாற்றில் வெளியேற்றி விடுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில், உரிய அனுமதியின்றி, முறையற்ற வகையில் கழிவுநீரை வெளியேற்றினால், குறிப்பிட்ட சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இதற்காக குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்