"மோடி செயல்பட்டிருந்தால் ஜெயலலிதா உயிருடன் இருந்திருக்கலாம்" - கே.எஸ்.அழகிரி

x

பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டிருந்தால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்திருக்கலாம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனின் அறிக்கை தீர்ப்பு அல்ல, அது ஒரு பரிந்துரை என்று குறிப்பிட்டுள்ளார். எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை சரியில்லாதபோது, அவரை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல மருத்துவ வசதியுடன் கூடிய விமானத்தை இந்திரா காந்தி ஏற்பாடு செய்தார் என்றும், அதனால்தான் எம்ஜிஆர் உயிர் பிழைத்தார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், பிரதமர் மோடி செயல்பட்டிருந்தால், ஜெயலலிதா உயிருடன் இருந்திருக்கலாம் என்றும் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்