மனிதநேய மையத்தில் படித்தவருக்கு ஐஏஎஸ் பணி - சைதை துரைசாமியிடம் நேரில் சந்தித்து வாழ்த்து

x

மனிதநேய மையத்தில் படித்து ஐஏஎஸ் பணி ஒதுக்கீடு பெற்ற எம்.அருண், மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனர் தலைவர் சைதை துரைசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அருணின் மனைவி பிரியங்காவும் உடனிருந்தார். யுபிஎஸ்சி சார்பில் சிவில் சர்வீசஸ் பதவியில் 2022-2023 ஆம் ஆண்டு காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. இதில் சென்னையில் உள்ள சைதை துரைசாமி மனிதநேய பயிற்சி மையத்தில் படித்து தேர்ச்சி பெற்ற 16 பேரில் 14 பேருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்