"என்ன அடிக்கிறாங்க சார் ...நான் இங்க இருந்து போகமாட்டான்" - கலெக்டர் ஆபிஸில் கதறி அழுத தாய்

x

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மூதாட்டி ஒருவர் கதறி அழுததால் அப்பகுதி பரபரப்பானது. ராமநாதபுரம் அருகே சித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வள்ளி. இவர் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, தனது 2வது மகன் ஆசை வார்த்தை கூறி பூர்வீக சொத்தை எழுதி வாங்கிக்கொண்டு, தன்னை கவனிக்க மறுப்பதாக கூறி கண்ணீர் மல்க கதறி அழுதார். உடனே அங்கிருந்த அலுவலர்கள், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி மூதாட்டியை சமாதானம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்