"மீண்டும் ஒரு வாரத்தில் கோட்டைப்பட்டினம் செல்வேன்" - வேலூர் இப்ராஹிம்

x

அறந்தாங்கி அருகே நாகுடியில் பாஜக சார்பில் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். ஆலோசனைக் கூட்டத்தினை தொடர்ந்து கோட்டைப்பட்டினத்தில் உள்ள கட்சி நிர்வாகியை சந்திப்பதற்காக புறப்பட்டுள்ளார்.

அதற்கு கோட்டைப்பட்டினம் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதனையடுத்து வேலூர் இப்ராஹிம்மை அங்கு செல்லக் கூடாது என காவல்த்துறையினர் தடுத்துள்ளனர்.

ஆனால் தடுப்பையும் மீறி இப்ராஹிம் கட்சி நிர்வாகிகளுடன் புறப்பட்டுச் சென்ற நிலையில் கைது செய்யப்பட்டார்.

விடுவிக்கப்பட்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீண்டும் ஒரு வாரத்தில் கோட்டைப்பட்டினம் செல்வோம் என்றார்.

அப்போதும் காவல்துறை தடுத்தால் மிகப்பெரிய போராட்டம் செய்து சிறைக்கு செய்ய தயார் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்