"ரூ.1000 நோட்டை அறிமுகம் செய்தாலும் ஆச்சரியப்பட மாட்டேன்" - ப.சிதம்பரம்

x

ஆயிரம் ரூபாய் நோட்டை மத்திய அரசு மீண்டும் அறிமுகம் செய்யக்கூடும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் பரிமாற்றத்திற்கு கடினமாக இருக்கும் என 2016ம் ஆண்டிலேயே தான் தெரிவித்ததாகவும் தற்போது அது நிரூபணம் ஆகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை பெரும்பாலான மக்கள் பயன்படுத்தவில்லை எனவும், ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு மீண்டும் அறிமுகம் செய்தாலும் கூட ஆச்சரியப்பட மாட்டேன் எனவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்