'உங்களுக்கு வேலை வாங்கித்தர்றேன்..' 18 லட்சத்தை சுருட்டிய மோசடி நபர்.. சென்னையில் பகீர் சம்பவம்

x

ஆவடி அருகே வேலை வாங்கி தருவதாகக் கூறி 18 லட்ச ரூபாய் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். ஆவடி அருகே கெங்குரெட்டி குப்பத்தைச் சேர்ந்தவர் சர்மிளா. சென்னை, பெரம்பூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், சர்மிளாவிடம் வேலை வாங்கி தருவதாகக் கூறி கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை கொஞ்ச கொஞ்சமாக 18 லட்ச ரூபாயை மோசடி செய்துள்ளார். மேலும், பணத்தை யமுனா என்ற பெண்ணின் வங்கி கணக்கில் செலுத்த நிர்பந்தித்துள்ளார். பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சர்மிளா, இது குறித்து போலீசாரிடம் புகாரளித்துள்ளர். இதையடுத்து, தலைமறைவாக இருந்த கார்த்திகேயன் மற்றும் யமுனா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்