"கை, கால் வெட்டிடுவேன் எவன் வந்தாலும்.." போலீஸ் முன்னே பெண் வட்டாட்சியரை மிரட்டிய விசிக மாவட்ட செயலாளர்

x

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெண் வட்டாட்சியரை விசிக மாவட்ட செயலாளர் பகிரங்கமாக மிரட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னசேலம் அருகே அ.வாசதேவனூரில் அனுமதியின்றி விசிகவினர் கொடிகம்ப‌ம் நட்டுள்ளனர். அதனை அகற்றுமாறு வட்டாட்சியர் இந்திரா உத்தரவிட்டுள்ளார். இதனால் ஆத்தரமடைந்த விசிக மாவட்டச் செயலாளர் தனபால், மேஜிஸ்திரேட் என்றால் என்ன, வெளியே போ... என்று ஒருமையிலும், எவன் வந்தாலும் கை, கால்களை வெட்டி விடுவேன் என்று கூறி தகாத வார்த்தைகளாலும் திட்டினார். அருகில் போலீசார் இருக்கும் போதே பெண் வட்டாட்சியரை விசிக மாவட்டச் செயலாளர் பகிரங்கமாக மிரட்டிய வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்