அக்காவும் வேணும், தங்கச்சியும் வேணும் கிடைக்கலனா..? பெண்ணுக்கு நடந்த சோகம்.. வெளிவந்த அதிர்ச்சி cctv காட்சி

x

ஆந்திர மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள சுகாதார நிலையத்தில்இரவு உறங்கி கொண்டிருந்த பெண்ணை கொல்ல முயற்சித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக பணியாளராக அனிதா என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவரது அக்காவின் கணவரான கிசன் நாயக், அனிதாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்ததால், சுகாதார நிலையம் சென்று இரவு நேரத்தில் அனிதாவை கொல்ல முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து அலறியடித்த படி, அனிதா வெளியே ஓடி வந்தார்.

இதன் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் போலீசார், கிசன் நாயக்கை கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்