"சொந்தக்கால்ல சாதிக்கணும்னு நினைச்சேன்.. ஆனா அசிங்கமா பட்டம் கட்டுறாங்க"' - பார் மரணம்.. முன்னாள் மனைவி கதறல்

x

தஞ்சையில் டாஸ்மாக் பாரில் மது குடித்து உயிரிழந்த வழக்கில், விசாரணை என்ற பெயரில் போலீசார் தரக்குறைவாக நடத்துக்கொள்வதாக உயிரிழந்தவரின் மனைவி வேதனை தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் கீழ அலங்கம் பகுதியில் உள்ள மதுபான பாரில் மது வாங்கி குடித்த விவேக் மற்றும் குப்புசாமி என்ற இருவர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கான காரணம் இதுவரை கண்டுப்பிடிக்கப்பட வில்லை. இந்நிலையில், உயிரிழந்த விவேக்கிற்கும் அவரது மனைவி ரேகாவிற்கும் கடந்த ஒன்றரை ஆண்டிற்கு முன்பே விவாகரத்தான நிலையில், விசாரணை என்ற பெயரில் போலீசார் தொந்தரவு அளிப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்