ஒரு வருஷம் இதுக்காகவே படிச்சேன்... ஐ.எப்.எஸ் கிடைக்குமா-னு தெரில - யுபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி

x

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் சென்னை பெரம்பூரை சேர்ந்த மாணவி ஜீஜீ தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

மத்திய அரசு தேர்வாணையத்தினால் நடத்தப்படும் யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில், பெரம்பூரை சேர்ந்த ஜீஜீ என்ற மாணவி தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்துள்ளார். எலக்ட்ரீசியன் தொழில் செய்பவரின் மகளான இவர் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் பெண்கள் கல்லூரி யில் படித்து வந்தார். 2022 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தினால் நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதினார். இந்திய அளவில் 107 வது இடமும் தமிழக அளவில் முதலிடமும் பெற்று ஜீஜீ சாதனை படைத்துள்ளார். கல்லூரி படிப்பு முடித்து ஒரு வருடம் தீவிர பயிற்சியில் ஈடுபட்ட ஜீஜீ தனது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார். தமிழ் இலக்கியத்தை விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்த ஜீஜீ, ஐ.எப்.எஸ் அல்லது ஐ.பி.எஸ் பணியில் சேர்ந்து சேவை செய்ய விருப்பம் உள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்