சைலேந்திர பாபு.. உங்களை நேரில் பார்க்கணும்" - செல்போன் டவரில் ஏறி இளைஞர் ரவுசு

x

நாமக்கல்லில், டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை நேரில் பார்க்க வேண்டுமென கோரி, செல்போன் டவரில் ஏறி இளைஞர் போராட்டத்தில் ஈடுபட்டார். நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள சுமார் 300 அடி உயர பி.எஸ்.என்.எல். செல்போன் டவரில், வெண்ணாந்தூரை சேர்ந்த சுரேஷ் என்பவர், பெட்ரோல் கேனுடன் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். முன்னதாக பொதுமக்களிடம் மனு ஒன்றை வழங்கியுள்ளார். அதில், கார் திருட்டு வழக்கில் கைதாகி மத்திய சிறையில் இருந்தபோது, தனக்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு தன்னம்பிக்கை அளித்ததாகவும், அதனால் அவரது ரசிகனாக மாறியுள்ள தான், அவரை சந்திக்க முயன்றும் முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியபின் சுரேஷ் கீழே இறங்கி வந்தார்.


Next Story

மேலும் செய்திகள்