"ஒரு மாசம் ஓட்டுனேன் - முடியல" - "என்னோட இந்த முடிவுக்கு காரணம் இவர் தான்" - ஓட்டுநரின் பரிதாபமான வீடியோ

x

பழனியில் நாள் ஒன்றுக்கு தொடர்ந்து 20 மணி நேரம் அரசு பேருந்து இயக்க சொல்லி வற்புறுத்தியதால் பேருந்து ஓட்டுனர் விஷம் அருந்தி தற்கொலை செய்யப் போவதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

கோதைமங்கலத்தை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனர் ராஜ்குமார் வெளியிட்ட வீடியோவில், உறக்கமே நான்கு மணி நேரம் தான் என்றும் இது குறித்து கேட்டதற்கு கிளை மேலாளர் கார்த்திகேயன் தகாத வார்த்தைகளால் திட்டியதாக புகார் கூறியுள்ளார்.

வீடியோ வெளியிட்டு விட்டு விஷத்தை அருந்திய ராஜ்குமாரை சக ஊழியர்கள் மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.


Next Story

மேலும் செய்திகள்