"நீதியை மதிக்காத இங்க வாழ விரும்பல.. என்ன கைலாசாவுக்கு அனுப்பிடுங்க.."- கிறுகிறுக்க வைத்த முதியவர்

x

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அரசு அதிகாரிகள் அகற்றாததால் தன்னை நித்யானந்தாவின் கைலாசாவுக்கு அனுப்பி விடுமாறு புதுக்கோட்டை ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்க வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விராலிமலை அருகே உள்ள கொடும்பாலூர் சத்திரத்தைச் சேர்ந்த செல்வராஜ், யாசகம் பெற்று விராலிமலை முருகன் கோயில் அடிவாரத்தில் அன்னதானம் செய்வது வழக்கம். இவர், விராலிமலை அருகே உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், 3 ஆண்டுகளுக்கு முன்பு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் நீதியை மதிக்காத இங்கு தான் வாழ விரும்பவில்லை என்று தெரிவித்த செல்வராஜ், தன்னுடைய ஆதார், ரேஷன் கார்டுகளை ஒப்படைப்பதாகவும், தன்னை நித்யானந்தாவின் கைலாசாவுக்கு அனுப்பி விடுமாறும் கோரிக்கை விடுத்து செல்வராஜ் ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக வந்த நிலையில், அங்கு பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்