"கண்ட கருமத்துக்குலாம் டிக்கெட் தர முடியாது..இப்போ இறங்குறியா..? இல்ல தூக்கி எறியட்டுமா.." மாணவியை நடுவழியில் இறக்கி விட்ட கண்டக்டர்

x

நெல்லையில் பறை இசைக் கருவிகளுடன் அரசுப் பேருந்தில் ஏறிய கல்லூரி மாணவியை நடத்துனர், நடுவழியில் இறக்கி விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கல்லூரி கலை நிகழ்ச்சிக்காக வந்த அந்த மாணவி, நிகழ்ச்சி முடிந்து நெல்லையில் இருந்து மதுரைக்குச் சென்றபோது நெல்லை வண்ணாரப்பேட்டை பேருந்து நிலையத்தில் இறக்கி விடப்பட்டார். இசைக் கருவிகளுடன் அழுது கொண்டிருந்த மாணவியை, அங்கு வந்த செய்தியாளர்கள், சுமார் அரை மணி நேர முயற்சிக்குப் பிறகு வேறு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்