"கொசுத் தொல்ல தாங்க முடியல..." - பேருந்தில் பயணி செய்த வினோத சம்பவம்

x

அரசு குளிர்சாதனப் பேருந்தில் கொசுத் தொல்லை தாங்க முடியாததால், பயணி ஒருவர் பேருந்து முழுவதும் கொசு மருந்து அடித்த வினோத சம்பவம் அரங்கேறி உள்ளது. கோவையில் இருந்து மதுரை சென்ற அரசு குளிர்சாதனப் பேருந்தில் கொசுக்கள் அதிகமாக இருந்துள்ளன. இதனால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். இதனையடுத்து, ஒட்டன்சத்திரம் அருகே, பேருந்தை நிறுத்தச் சொல்லி இறங்கிய பயணி ஒருவர், தனது சொந்த செலவில் கொசு மருந்து வாங்கி பேருந்து முழுவதும் தெளித்தார். இதனையடுத்து, பேருந்து புறப்பட்ட நிலையில், இது தொடர்பான காட்சிகள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்