"பல வருஷமா நம்பினேன்... ஆனா..?சோக கடலில் "நேஷனல் Crush.."கூடவே இருந்து குழி பறித்த நபர்..யார் அந்த நபர்..? நடந்தது என்ன..?

x

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக உருவெடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து வரும் ராஷ்மிகா மந்தனாவிடம் மேனேஜராக பணிபுரிந்தவர் சுமார் 80 லட்ச ரூபாய் வரை மோசடி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகையை ஏமாற்றியது யார் ? பின்னணி என்ன ? என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் படங்களின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. இளைஞர்கள் மனதை கவர்ந்த ராஷ்மிகா நேஷனல் க்ரஷ் ஆகவும் வலம் வந்தார். தனது எக்ஸ்பிரசன்ஸ் வைத்து ரசிகர்களை கவர்ந்தவர், கன்னடம், தெலுங்கு, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக மாறினார்.

கார்த்தியுடன் சுல்தான் படத்தில் கலக்கிய ராஷ்மிகா, வாரிசு படத்தில் ரஞ்சிதமே, ஜிமிக்கி பொண்ணு பாடல் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றார். புகழ் ஓங்கிய அளவிற்கு விமர்சனங்களும் எழ.. ராஷ்மிகாவை ட்ரோல் செய்யவும் ஒரு கூட்டம் இருந்தது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவ்வப்போது நேர்மறை எண்ணங்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் போஸ்ட்கள் பதிவிடுவார். அண்மையில் புஷ்பா திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர், அனிமல் மற்றும் புஷ்பா 2ம் பாகத்தில் பிசியாக இருந்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா .

பொதுவாக நடிகைகளுக்கு கால் ஷீட் முதல் பேமன்ட் வரை பார்த்துக்கொள்ள மேனேஜர் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பார். நடிகை எங்கு எப்போது செல்வார், யாரை சந்திப்பார், எப்போது எந்த பட சூட்டிங், இயக்குநர்களுக்கு தேதி கொடுப்பது என நடிகையின் ரைட் ஹான்டாகவே மேனேஜர்கள் இருப்பர். அனைத்து நடிகர் நடிகைகள் போலவே ராஷ்மிகாவுக்கும், ஆரம்பத்தில் இருந்தே நம்பிக்கையான ஒரு நபர் அவருக்கு மேனேஜராக இருந்தார்.

தன் சினிமா பயணத்தின் ஆரம்பத்திலிருந்தே தன்னுடன் இருந்தவர் என்பதால் அவரை கண்மூடித்தனமாக நம்பி கொண்டிருந்த ராஷ்மிகாவுக்கு, அந்த மேனேஜர் தன்னிடம் 80 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்துள்ளது. உடனடியாக அந்த மேனேஜரை பணிநீக்கம் செய்து அதிரடி காட்டியுள்ளார் ராஷ்மிகா. இருப்பினும் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளாமல் மௌனம் காக்கும் ராஷ்மிகா தான் நம்பியவரே இது போல் ஏமாற்றியதால் சோகத்தில் ஆழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்