"அடித்து கொன்றேன்" ஒரு ட்வீட்.. மாட்டிக் கொண்ட எச்.ராஜா! - விசாரணை நடத்த ஆட்சியருக்கு உத்தரவு

"அடித்து கொன்றேன்" ஒரு ட்வீட்.. மாட்டிக் கொண்ட எச்.ராஜா! - விசாரணை நடத்த ஆட்சியருக்கு உத்தரவு

பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா கடந்த மாதம் தனது ட்விட்டர் பதிவில், தனது வீட்டில் ஒரு நாய் வளர்த்ததாகவும், அது தனது கால்நடைகளை கடித்து குதறியதால் அதனை அடித்து கொள்ள பரிந்துரைத்ததாகவும் பதிவிட்டிருந்தார்.

இது குறித்து, டெல்லியை சேர்ந்த நபர் விலங்குகள் நல வாரியத்தில் புகார் தெரிவித்தார். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து சிவகங்கை ஆட்சியர் உரிய விசாரனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு, விலங்குகள் நல அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும், இது குறித்து ஹெச்.ராஜாவிடம் கேட்டபோது, இந்து மதம் குறித்து தவறாக பேசி வருபவர்களுக்கு தனது பானியில் பதில் விடுத்து அந்த பதிவை செய்ததாகவும் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com