நோயால் அவதிப்பட்ட 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கண்ணெதிரே கொன்ற பெற்றோர்.. அடுத்து தம்பதி எடுத்த முடிவு - திருப்பதியில் பயங்கரம்

x
  • ஹைதராபாத்தில் உள்ள குஷாய்குடா பகுதியை சேர்ந்த சதீஷ் - வேதா தம்பதிக்கு, தலா 9 மற்றும் 5 வயதில் இரு ஆண் குழந்தைகள் இருந்தன.
  • இந்த குழந்தைகள் இருவருக்கும், பிறந்தது முதல் உடல் நிலையில் தீவிர பாதிப்புகள் இருந்து வந்தன.
  • எனவே, மகன்கள் 2 பேருக்கும் சிகிச்சை அளிக்க, கடந்த பல ஆண்டுகளாக, அந்த தம்பதி தாங்கள் சம்பாதித்த பணம் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கிய பணம் ஆகியவற்றை செலவு செய்தனர்.
  • எனினும், குழந்தைகள் உடல்நிலை மோசமடைந்ததால், மனவேதனை அடைந்த தம்பதி இருவரும், குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்தனர்.
  • பின்னர் இரண்டு பேரும் அதே விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
  • அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 4 பேரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்