வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற கணவன்...மனைவி வைத்த பொறியில் போலீசிடம் சிக்கினார்

x

மதுரையைச் சேர்ந்தவர் ராஜ பிரபு. இவர் மீது மதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், ராஜ பிரபு, ஸ்காட்லாந்து செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

அப்போது பயணிகளின் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனை செய்தபோது, ராஜ பிரபுவின் மீது வரதட்சணை கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்ததும், அவருக்கு தேடப்படும் குற்றவாளியாக லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, அதிகாரிகள் அவரை மதுரை போலீசாரிடம் ஒப்படைக்கும் பணியை மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்