“மேலும் 3 தோசை வேணும்...“ திடீரென காலியான கேஸ் - ஆத்திரத்தில் மனைவியை வெட்டி கொன்ற கணவன்

x

போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகே உள்ள என்.மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கு, அவரது மனைவி மாதம்மாள் தோசை சுட்டு கொடுத்துள்ளார். 2 தோசைகள் கொடுத்த நிலையில், சிலிண்டர் காலியாகியுள்ளது. மேலும், 3 தோசைகள் வேண்டுமென கணேசன் கேட்க, சிலிண்டர் தீர்ந்துவிட்டதாக மாதம்மாள் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த கணேசன், வீட்டில் இருந்த அரிவாளால் மாதம்மாளை சரமாரியாக வெட்டியுள்ளார். அப்போது அதனை மருமகள் விஜயலட்சுமி தடுக்க வந்தபோது, அவரையும் தாக்கியதில், கையில் இருந்த ஒரு வயது குழந்தையின் தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டள்ளது. 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மாதம்மாள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மேலும், குழந்தை உட்பட இருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவத்தில் கணேசனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்