"சாரி அம்மு.. என்னால முடியல" - மனைவிக்கு அழுதபடி ஆடியோ அனுப்பி உயிரை மாய்த்துக்கொண்ட கணவன்

x

புதுச்சேரியில் இயங்கி வரும் தனியார் உணவு விடுதியில் சோம்பட்டு கிராமத்தை சேர்ந்த அய்யனார் என்பவர் சமையல் கலைஞராக பணியாற்றி வந்துள்ளார்.

ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் தங்கி இருந்த அவர், யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அய்யனார் ஆன்-லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துக் கொண்டது தெரியவந்துள்ளது.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அய்யனார், தனது மனைவிக்கு பேசி அனுப்பிய ஆடியோ தற்போது வெளியாகி உள்ளது.

அதில், ஆன்-லைன் விளையாட்டில் பணத்தை இழந்தாதால் தற்கொலை செய்து கொள்வதாக அய்யனார் அழுது கொண்டே பேசியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்