"என் சாவுக்கு பொண்டாட்டியும் அந்த 4 பேரும் தான் காரணம்" - வீடியோ போட்டு கணவன் தற்கொலை

x

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தற்கொலை செய்து கொண்டதை வீடியோவாக பதிவு செய்த நபரின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், செம்படை கிராமத்தைச் சேர்ந்த தம்பதி வெற்றிவேல்-வேம்பு.

கணவன் மனைவிக்கு இடையே தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, வெற்றிவேல் தனது நகை மற்றும் பணத்தை தனது குடும்பத்தினரிடம் கொடுத்து வைத்ததாக தெரிகிறது. அவற்றை திருப்பி கேட்ட போது கொடுக்க மறுத்ததுடன் வெற்றிவேலை அவர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால், வெற்றி வேல் மதுவில் விஷம் கலந்து குடித்து உயிரிழந்தார்.

அதற்கு முன்பாக தான் தற்கொலை செய்து கொண்டதையும், அதற்கு தனது மனைவி தான் காரணம் எனவும் கூறி வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

மேலும், இது குறித்து கடிதமும் எழுதி வைத்துள்ளார்.

இந்நிலையில், வெற்றிவேலின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்