3வது மனைவியை விட்டு 17 வயது சிறுமியுடன் ஓட்டம் பிடித்த கணவன்.. 4வது திருமணத்தில் வெளிவந்த அம்பலம்

x

அருப்புக்கோட்டையில் ஏற்கனவே மூன்று பெண்களை திருமணம் செய்த நபர் ஒருவர் நாளவதாக 17 வயது சிறுமியை திருமணம் செய்ததால் போக்சோ வழக்கின் கீழ் போலீசரால் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் பொதிகுளத்தை சேர்ந்தவர் சதீஷ்.

இவருக்கு ஏற்கனவே 2 பெண்களுடன் திருமணமாகி, தற்போது மூன்றாவதாக முருகலட்சுமி என்பவரை திருமணம் செய்து அருப்புக்கோட்டையில் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், சதீஷுக்கும் அவர் வீட்டின் அருகே ஆடு மேய்த்து கொண்டிருந்த 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. இதையடுத்து, சதீஷ் அந்த சிறுமியை திருமணம் செய்து அழைத்து கொண்டு வெளியூருக்கு சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே தன் மகளை மீட்டு தரக்கோரி சிறுமியின் தந்தை போலீசில் புகாரளித்திருந்தார்.

விசாரணை நடைபெற்று கொண்டு இருக்கையில், தன் சகோதரியின் வீட்டில் மகள் இருப்பதை அறிந்த சிறுமியின் தந்தை விரைந்து சென்று மகளை மீட்டார்.

இதனிடையே, தலைமறைவான சதீஷை கண்டு பிடித்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து அந்த 17 வயது சிறுமி விருதுநகரில் உள்ள காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்