சவுதி சிறையில் வாடும் கணவர்... மீட்க கோரி கைக்குழந்தையுடன் கதறும் மனைவி - கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

x

ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட தியாகவன் சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார்.

இவர் ஏர்வாடி தர்காவை சேர்ந்த வெளிநாடு அனுப்பும் ஏஜென்டிடம் ரூபாய் 90,000 கொடுத்து சவுதி அரேபியாவில் வேலைக்கு சென்றுள்ளார்.

பின்னர் கடந்த மாதம் 2021 ஆம் ஆண்டு திருமணத்திற்காக ராமநாதபுரம் வந்த அவர் மீண்டும் சவுதி அரேபியா சென்றார்.

அப்போது 2 பேர் ஒரு பார்சலை கொடுத்து அதில் கருவாடு உள்ளது என கூறி, சவுதி அரேபியாவில் உள்ள ஓனரிடம் கொடுத்து விடுமாறும் கூறியுள்ளனர்.

இதனை நம்பிய சரத்குமார், சவுதி அரேபியா விமானநிலையம் சென்ற போது, பார்சலில் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து உடனடியாக சரத்குமாரை அந்நாட்டு போலீசார் போதைப்பொருள் கடத்திய வழக்கில் கைது செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

தற்போது சிறையில் வாடும் தமது கணவரை, மீட்டு தர கோரி, தமது கை குழந்தையுடன் கிரிஜா, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்ணீர் மல்க மனு அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்