மனைவியை இறுக்கமாக கட்டிப்பிடித்து மெட்ரோ ரயில் முன் பாய்ந்த கணவன்..அதிர வைக்கும் CCTV

x

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில், மெட்ரோ ரயில் முன்பு குதித்து கணவன்-மனைவி தற்கொலைக்கு முயன்ற பரபரப்பு சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.


கொல்கத்தாவில் உள்ள நோவாபரா மெட்ரோ ரயில் நிலையத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, மெட்ரோ ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது கணவன் மனைவி இருவர், சகஜமாக நடப்பது போல் சென்று கொண்டிருந்தனர். ரயில் நிலையத்தை ரயில் நெருங்கியதும், மனைவியின் பின்னால் நின்று கொண்டிருந்த கணவர், மனைவியை பிடித்துக்கொண்டு ரயில் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலைக்கு முயன்றார். அவர்களை மெட்ரோ ஊழியர்கள் மீட்டனர். இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறும் நிலையில், அதிர்ச்சியூட்டும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்