கணவனை காவு வாங்கிய கள்ளச்சாராயம்... "நியாயம் கிடைக்காவிட்டால்... குடும்பத்துடன் தற்கொலை..." - மனைவி ஆவேசம்

x

வேலூர் மாவட்டத்தில், கள்ளச்சாரயம் குடித்து, கணவர் உயிரிழந்ததாக மனைவி, காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

ஒடுகத்தூரை அடுத்த ஆசனாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன். கூலித் தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில், அதே ஊரில் விற்கப்படும் கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்து, அவர் இறந்து விட்டதாக மனைவி செந்தாமரை, போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரண செய்து வருகின்றனர். இந்நிலையில், தனக்கு உரிய நீதி கிடைக்காவிட்டால், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக குமரேசனின் மனைவி செந்தாமரை கூறியுள்ளார். இந்நிலையில், குமரேசனின் உடல், பிரேத பரிசோதனைக்குப் பிறகு இறுதி அஞ்சலிக்காக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்