3 மாத கர்ப்பிணியை அடித்து கொன்ற கணவன் - காதலித்து திருமணம் செய்த நிலையில் சோகம் | Madurai

x

மதுரை மாவட்டம் திருமங்கலம் சாந்தக்குடி பகுதியை சேர்ந்தவர் சதீஷ். 33 வயதான இவர் தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்த 22 வயது இளம் பெண்ணான ரம்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இருவரும், திருப்பரங்குன்றம் அடுத்துள்ள விளாச்சேரி முனியாண்டிபுரம் பகுதியில் தனியாக வசித்து வந்த நிலையில், ரம்யா 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில், இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், கர்ப்பிணி பெண் ரம்யாவை, சதீஷ் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், கணவர் சதீஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்