ரத்தம் தெறிக்க தீயில் உருண்ட 'தலைகள்'..! - தங்கள் தலையைத் தாங்களே வெட்டிய தம்பதி - திகில் பின்னணி

x

ராஜ்கோட் மாவட்டம் விஞ்சியா கிராமத்தைச் சேர்ந்த ஹேமுபாய் மக்வானா - ஹன்சா பென் தம்பதி கடந்த ஓராண்டு காலமாக தங்கள் வீட்டிலேயே அமானுஷ்யமாக மாந்திரீக பூஜைகள் நடத்தி வந்துள்ளனர். இவர்கள் தங்களது இடத்தில் நெருப்பு மூட்டி, அந்தக் காலத்தில் மரண தண்டனை வழங்க ஒரு இயந்திரம் வைக்கப்பட்டிருக்குமே... அதே போன்ற இயந்திரத்தில் தங்கள் தலையைக் கொடுத்து துண்டாக்கி, அவை நெருப்பில் உருண்டோடி மிக பயங்கரமாக தங்களைத் தாங்களே நரபலி கொடுத்துள்ளனர்... இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், இந்த அதிர்ச்சிகர நரபலி சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்