"மனுதர்மம் தான் ஆட்சி செய்கிறது" - விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

குறும்படக் கலைஞர்கள், ஆவணப்படக் கலைஞர்களே புரட்சிக்கு வித்திடுவார்கள் என விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில், திருமாவள‌வனின் 60ஆவது பிறந்த‌தாளை யொட்டி குறும்பட, ஆவணப்பட கலை திருவிழா நடைபெற்றது. இதில், 10 குறும்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தலா 20 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. பின்னர் பேசிய திருமாவளவன், மனுதர்ம‌ம் தான் இன்னும் ஆட்சி செய்கிறது என்றார். குறும்பட ஆவணப்படக் கலைஞர்கள் புரட்சிக்கு வித்திடுவார்கள் என்றும், அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.  

X

Thanthi TV
www.thanthitv.com