“விதவிதமாய்.. வித்யாசமாய்..“ பலா பழத்தில் பிரம்மாண்ட வாயில்.. 3 டன் பழங்களில் அசத்தல் உருவம்..

x

நீலகிரியில் கோடை விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக 63வது பழக் கண்காட்சி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் துவங்கியது. எம்.பி ஆ.ராசா, அமைச்சர் ராமச்சந்திரன், ஆட்சியர் அம்ரித் ஆகியோர் இந்நிகழ்வைத் துவக்கி வைத்தனர். சுமார் 3 டன் எடை கொண்ட பழங்களைக் கொண்டு 6க்கும் மேற்பட்ட உருவங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. பலா பழங்களைக் கொண்டு பிரம்மாண்ட நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலைத்துறை சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு பழங்கள் காட்சிப்படுத்தியுள்ளன. 2 நாட்கள் நடைபெற உள்ள இந்த பழக் கண்காட்சியைக் காண ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்