"நீ எப்படி இதை செய்யலாம்" -அரசு அலுவலருக்கு பகீர் கொலை மிரட்டல்

x

100 நாள் வேலை திட்டம் குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் தெரிவித்த வட்டார வளர்ச்சி அலுவலரை, ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உடையூர் கிராமத்தில் நடைபெற்று வரும் நூறு நாள் வேலை திட்டம் குறித்த விவரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் பொதுமக்களுக்கு வழங்கியதாக தெரிகிறது. இதை அறிந்த உடையூர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் பரசுராமன், வட்டார வளர்ச்சி அலுவலரை தகாத வார்த்தைகளை சொல்லி மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்