"ஊராட்சி இடத்தில் எப்படி சுவரை கட்டலாம்?".. கடுமையாக நடந்த வாக்குவாதம்.. காயம் அடைந்த 2 பெண்கள்.. தென்காசியில் பரபரப்பு

x

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே சுவரை அகற்றுவது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கல்லூரணி ஊராட்சியில் வசிக்கும் சுடலையாண்டி தனது வீட்டின் அருகே சுவர் அமைத்துள்ளார். இந்த சுவர் பஞ்சாயத்து இடத்தில் அமைக்கப்பட்டு இருப்பதாக ஊராட்சி மன்றத் தலைவர் ராஜ்குமார் கூறி உள்ளார். சர்வே பணிகளுக்குப் பின் இடம் யாருக்கு சொந்தம் எனத் தெரியவரும் என சுடலையாண்டி குடும்பத்தினர் கூறிய நிலையில், சுவரை இடிக்க முற்பட்டபோது இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சுடலையாண்டியின் மகள்கள் காயம் அடைந்ததாக கூறப்படும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



Next Story

மேலும் செய்திகள்