"என்னடா இது..நமக்கு வந்த சோதனை.." திருட போன இடத்தில் கம கம விருந்து..சாப்பிட்டு சமத்தாக கிளம்பிய திருடர்கள்

x

கொள்ளையடிக்க வீட்டில் ஒன்றும் இல்லாததால் ஆத்திரம் அடைந்த திருடர்கள், மது அருந்தி விட்டு வீட்டில் சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவை சாப்பிட்டு விட்டு சென்ற அதிர்ச்சி சம்பவம் நாமக்கல்லில் நிகழ்ந்துள்ளது.

கணபதி பாளையத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் 16 வீடுகள் உள்ள நிலையில், நேற்று இரவு கொள்ளையர்கள் 10 வீடுகளின் கதவுகளை வெளிப்புறத்தில் தாழிட்டு விட்டு, 5 வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டனர். ஜான்சன் என்பவரின் வீட்டில் மட்டும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், அருகில் இருந்த 3 வீடுகளில் திருட முயன்றுள்ளனர். ஆனால் அங்கு பொருட்கள் இல்லாததால் விரக்தியில், செல்லம்மாள் என்பவரின் வீட்டில் சமைத்து வைக்கப்பட்டிருந்த சாதம், சாம்பார் ஆகியவற்றை நன்கு மூக்கு முட்ட சாப்பிட்டு விட்டு, அங்கேயே மதுவும் அருந்தி விட்டு சென்றுள்ளனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்