நிழலில் நிற்க சண்டை போடும் யானைகள்... அழிவுப் பாதையை நோக்கி செல்கிறதா இயற்கை

  • நிழலில் நிற்பதற்கு காட்டு யானைகள் மோதிக் கொண்ட சம்பவம் இயற்கை அழிவுப் பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதை தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது.
  • கர்நாடக வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த 5 காட்டு யானைகள் ஓசூர் அருகே உள்ள சூதாளம் கிராமத்தில் ஆஞ்சநேயர் கோயில் அருகே உள்ள புங்கமரங்கள் அதிகம் நிறைந்த பகுதியில் முகாமிட்டுள்ளன.
  • இந்த யானைகளை 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தற்போது ஓசூரில் வழக்கத்திற்கு மாறாக வெயில் வாட்டி வரும் நிலையில், யானைகள் ஒதுங்க உயர்ந்த மரங்களில்லாமல் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளன.
  • நீண்ட நேரமாக வேகாத வெயிலில் அவை நின்ற நிலையில், ஒரு யானை மர நிழலில் இளைப்பாறிய போது, கோபத்தில் மற்றொரு யானை அதை தும்பிக்கையால் தள்ளி விட்டு தான் அந்த மர நிழலில் நிற்பதற்கு சென்றது.

Next Story

மேலும் செய்திகள்