விஷ சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை... பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பரபரப்பு புகார்

x

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே விஷச்சாராயம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டுமென உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எக்கியார்குப்பத்தில் விஷச்சாராயம் அருந்தி 58 பேர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம், ஜிப்மர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதில் இதுவரை 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், கள்ளச்சாராயம் அருந்தி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு குளூக்கோஸ் மட்டுமே ஏற்றப்படுவதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, முறையான சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்த ராஜவேல் என்பவரின் உடலை வாங்கப்போவதில்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்